பிரதோஷம் மற்றும் மாத சிவராத்திரி இவை இரண்டுமே மிகவும் சிறப்புக்குரிய நாட்களாகும். இந்த இரண்டும் ஒரே நாளில் இணைந்து வருவது மிகவும் அற்புதமான பலன்களை தரக் கூடியதாகும். இந்த நாளில் ஈசனை எப்படி வழிபட்டால், என்ன செய்தால் தடைகள் விலகி, மகிழ்ச்சியும், அனைத்து விதமான நலன்களும் ஏற்படும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

பிரதோஷத்துடன் வரும் மாத சிவராத்திரியின் வழிபாட்டு முறை | Pirathosaththutan Varum Matha Shivaratri Astrology

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பிரதோஷம் மற்றும் மாத சிவராத்திரி இரண்டும் ஒரே நாளில் இணைந்து மார்ச் 27ம் தேதி வர உள்ளது. அதுவும் இவை இரண்டும் இணைந்து வியாழக்கிழமையில் வருவது இன்னும் கூடுதல் சிறப்பானதாகும்.

 இந்த நாளில் சிவன், சிவ வடிவங்களில் ஒன்றான தட்சிணாமூர்த்தி மற்றும் மங்கள கிரகமான குரு பகவான் ஆகியோரை வழிபடுவது மிகவும் ஏற்றது. இந்த நாளில் சிவலிங்கத்திற்கு சுத்தமான நீரால் அபிஷேகம் செய்வதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பிரதோஷத்துடன் வரும் மாத சிவராத்திரியின் வழிபாட்டு முறை | Pirathosaththutan Varum Matha Shivaratri Astrology

இந்த நாளில் சிவ புராணம் படிப்பது, சிவனுக்குரிய மந்திரங்கள் ஜபம் செய்வதும், சிவனை நினைத்து தியானம் செய்வதும் மிகவும் சிறப்பானதாகும்.

தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தை பெறுவதற்காக பாற்கடலை கடைந்த போது, முதலில் வெளிப்பட்டது ஆலகாலம் எனப்படும் விஷம். இது பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு அனைவரையும் துரத்தத் துவங்கியது.

அனைவரும் இதைக் கண்டு நடுங்கிய போது, உலக உயிர்களை காப்பதற்காக சிவ பெருமான் அந்த ஆலகால விஷயத்தின் கடைசி துளி வரை பருகினார்.

அப்படி அவர் ஆலகால விஷத்தை உண்டு, நந்தியின் கொம்புகளுக்கு இடையே நர்த்தனம் ஆடிய மாலை வேளை, பிரதோஷ நேரமாக கருதப்படுகிறது.

பிரதோஷத்துடன் வரும் மாத சிவராத்திரியின் வழிபாட்டு முறை | Pirathosaththutan Varum Matha Shivaratri Astrology

சிவ-சக்தி ஐக்கியத்தின் அடையாளமாக போற்றப்படும் நாள் சிவராத்திரியாகும். தேய்பிறையில் வரும் சதுர்த்தசி நாளை மாத சிவராத்திரியாக கொண்டாடுகிறோம்.

இதுவே உலக உயிர்கள் தோன்றிய தினமாக கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து, தெய்வ அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாக குறிப்பிடப்படுகிறது.

பிரதோஷ விரதம், மாத சிவராத்திரி விரதம் இரண்டுமே சிறப்புக்குரியதாகும். இவை இரண்டும் ஒரே நாளில் வருவதால் இரு மடங்கு பலன் தரக் கூடிய சிறப்பான நாளாகும்.

இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் தடைகளில் இருந்து விடுபட முடியும். பிறப்பு-இறப்பு சுழற்சியில் இருந்து விடுபட முடியும்.

பிரதோஷத்துடன் வரும் மாத சிவராத்திரியின் வழிபாட்டு முறை | Pirathosaththutan Varum Matha Shivaratri Astrology