ஜோதிடத்தில், சனி மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக பார்க்கப்படுகிறது. அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக உள்ள சனி பகவான் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். சனி பெயர்ச்சியால் உருவாகும் சனியின் நிலை மாற்றத்தால், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ஜோதிடத்தின் படி இன்று (29) சனி கும்ப ராசியிலிருந்து வெளியேறி, மீன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த நிகழ்வு இரவு 10:07 மணிக்கு நிகழும். 30 வருடங்களுக்குப் பிறகு சனி பகவான் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.

இன்று சனி பெயர்ச்சி மட்டுமின்றி, சூரிய கிரகணமும் நிகழப் போகிறது. அதனுடன் அன்றைய தினம் சனி அமாவாசை ஆகும்.

மீன ராசிக்கு பெயர்ச்சி அடையும் சனி ​​மகர ராசியில் இருந்து முழுமையாக வெளியேறுவார். மேலும் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்கார்களுக்கும் சனி திசையில் இருந்து விமோசனம் கிடைக்கும்.

2025க்கான சனி பெயர்ச்சி இன்று ; பொற்காலம் ஆரம்பமாகும் ராசிகள் | Sani Peyarchi 2025 The Golden Age Begins

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மங்கள பலன் கிடைக்கும். அதிகபட்ச நன்மைகள் உண்டாகும். ஆடம்பரங்களும், வசதிகளும் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். புதிய வழியில் வருமான அதிகரிக்கும். திடீர் லாபம் பெறலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகர பலன் கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும். புதிய வாய்ப்புகளை பெறலாம். சமூக அந்தஸ்து உயரும். கௌரவமும் அதிகரிக்கும். வேலையில் பெரிய பதவியும் பொறுப்பும் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வேலையில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியைப் பெறலாம். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.