வீடுகளில் நாம் சாப்பிடுவதற்கு தயிர் வாங்குகிறோம். பொதுவாக சைவ சாப்பாடு சாப்பிடுவதென்றால் தயிர் இல்லாமல் சாப்பிட மாட்டோம். ஆனால் நாம் வீடுகளில் செய்யும் தயிரை விட கடைகளில் வாங்கும் தயிர் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் ஆரோக்கியம் கொஞ்சம் கூட இல்லை.
இனிமேல் அப்படி கடைகளில் வாங்க தேவை இல்லை. கடைகளில் நல்ல கெட்டியான சுவையான தயிருக்கு என்ன செய்கிறார்களோ அதை இந்த பதிவில் உங்களுக்கு கூற போகின்றேன்.
இதை நீங்கள் ஒரு முறை முயற்ச்சி செய்து பாருங்கள். இப்படி செய்து சாப்பிட்டால் உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும். இதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தயிர் என்பது பாலில் நுண்ணுயிரிகளின் நொதித்தல் மூலம் உருவாக்கப்படும் ஒரு உணவுப் பொருள். இதில் புரதம், கால்சியம், வைட்டமின் பி12, வைட்டமின் பி6 மற்றும் ரிபோஃபிளாவின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றது.
இது தவிர தயிர் செரிமானத்தை மேம்படுத்துகிறது, எலும்புகளை பலப்படுத்துகிறது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
தயிர் செய்ய 1 லிட்டர் நல்ல கெட்டியான பாலை முதலில் 5 நிமிடங்கள் அதிக வெப்பத்திலும், பின்னர் அடுத்த 5 நிமிடங்கள் குறைந்த வெப்பத்திலும் கொதிக்க வைக்க வேண்டும்.
கொதிக்கும் பால் குளிர்ந்த பிறகு, தயிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றவும் வைக்க வேண்டும். உரை என்பது 1 தேக்கரண்டி கெட்டியான தயிர் மற்றும் 2 தேக்கரண்டி பால் ஆகியவற்றின் கலவையாகும்.
பின்னர் இதை ஐந்து முறை மட்டும் கிளறவும். கிளறி முடிந்ததும் அதை நகர்த்தாமல் ஒரு சூடான இடத்தில் வைக்கவும். மூடி வைக்கலாம் அப்படி இல்லை எனில் பாலின் மேல் எலுமிச்சையின் ஒரு பகுதியை நறுக்கி அல்லது பச்சை மிளகாய்த் தண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
இப்படி செய்து ஒரு நாள் முழுக்க அப்படியே வைக்க வேண்டும். இதன் பின்னர் நீங்கள் செய்து வைத்து 24 மணி நேரத்தில் எடுத்தால் சுவையான கெட்டியான தயிர் தயாராகி விடும்.
இந்த தயிர் கோடை வெப்பத்தைக் குறைக்க இந்த வீட்டில் செய்த தயிர் ஒரு சிறந்த தேர்வாகும். வயிற்று உபாதைகளைத் தணிக்க குறிப்பாக கோடை காலத்தில் மக்கள் இதை சாப்பிடுகிறார்கள்.
இந்த தயிரை மோர் செய்து குடிக்கலாம், குழந்தைகளுக்கு இனிப்பு பானம் போல தயாரித்து கொடுக்கலாம், சாதத்துடன் வைத்து இன்னும் பல வகை உணவுகள் தயாரித்து உண்ணலாம்.