ஜோதிட சாஸ்த்திரத்தின்படி, ஒருவர் பிறந்த ராசி, நட்சத்திரம் மற்றும் அவர்கள் பிறந்த மாதம் அனைத்தும் அவர்களின் எதிர்காலம் பற்றிய கணிப்பில் தாக்கம் செலுத்துகின்றன.
அதே போன்று ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் அவர்களின் பிறந்த மாதம் முக்கியப்பங்கு வகிக்கிறது.
அப்படியாயின், குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் அசாதாரண புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாக இருக்கும்.
இவர்கள் வாழ்க்கை பற்றிய முடிவுகளில் அமைதி, சிந்தனையுடன் இருப்பார்கள். முதிர்ச்சி மற்றும் ஆழமான புரிதல் இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், புத்திசாலிகளாகவே வாழும் நபர்கள் என்னென்ன மாதங்களில் பிறந்திருப்பார்கள் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
ஜனவரி |
ஜனவரி மாதம் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவும், எப்போதும் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எப்போதும் பிரச்சினையை கண்டு பயம் கொள்ளாமல் பொறுமையாக யோசிப்பார்கள். தனித்துவமான கண்ணோட்டம் காரணமாக மற்றவர்களின் விடயங்களை புரிந்து கொண்டு அதன்படி செயற்படுவார்கள். |
ஏப்ரல் |
ஏப்ரல் மாதம் பிறந்தவர்கள் நிலையான மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். மன உறுதிக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பதால் எதிர்காலத்தை பற்றிய தூரநோக்கு இருக்கும். ஒரு முடிவை தெளிவாக எடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என தேடுவார்கள். முடிவுகளுக்கு பொறுப்பேற்றுக்கொள்ள எப்போதும் தயாராக இருப்பார்கள். எப்படியான சூழ்நிலைகள் வந்தாலும் சிறந்த தலைவர்களாக இருப்பார்கள். |
நவம்பர் |
நவம்பர் மாதம் பிறந்தவர்கள் சிறந்த முடிவுகளை எடுப்பார்கள். சமூக கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினைகளில் அவர்களுக்கு சாதகமான முடிவுகளை எடுப்பார்கள். அரிதாகவே மற்றவர்களின் தூண்டுதலின் பேரில் செயல்படுவார்கள், அப்போதும் அனைத்து காரணிகளிலும் கவனமாக இருப்பார்கள். வலுவான நீதி உணர்வு கொண்டவர்களாக இருப்பதால் ராஜதந்திரத்துடன் இருப்பார்கள். பார்ப்பதில் அவர்கள் திறமையானவர்கள் என்பதால், மக்கள் இயல்பாகவே அவர்களை நம்புகிறார்கள். |