ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்ச்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, விசேட திறமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக தாக்கம் செலுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் எவ்வளவு வயதானாலும் குழந்தை தனத்துடன் இருப்பார்களாம். இவர்கள் தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் பொறுப்புள்ளவர்களாக இருந்தாலும், இவர்கள் மனதளவில் விளையாட்டு குணம் கொண்டவர்களா இருப்பார்களாம்.

புற்றுநோயை எதிர்த்து போராடும் டாப் உணவுகள் இவைதானாம்! இனியும் தவிர்க்காதீங்க
அடிப்படி இயல்பிலேயே விளையாட்டு தனமாக நடந்துக்கொள்ளும் குணம் கொண்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

ராசியின் முதல் ராசியான மேஷம் தான் மிகவும் குழந்தைத்தனமான ஆன்மாவைக் கொண்டுள்ளது.குறிப்பாக இந்த ராசியில் பிறந்த பெண்கள் எவ்வளவு வயதானாலும் மனதளவில் குழந்தைகளாகவே இருப்பார்கள்.
அதற்காக இவர்கள் பொறுப்பற்றவர்கள் என்று அர்த்தம் கிடையாது. தங்களின் அனைத்து கடமைகளையும் சிறப்பாக செய்யும் ஆளுமை இவர்களிடம் இருக்கும்.
ஆனால் இவர்களின் தனிப்பட்ட நேரத்தை மினவும் விளையாட்டுத்தனமாகவும் எளிமையாகவும் கழிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் பிறப்பிலேயே பூமியுடன் ஒரு சிறப்பு தொடர்பைக் கொண்டுள்ளனர். இவர்கள் வாழ்வில் நேர்மைக்கும்,உண்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
அவர்கள் மற்றவர்களின் பார்வைக்கு அதிக வலிமை கொண்டவர்களாக தோன்றினாலும், மனதளவில் மிகவும் மென்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
எவ்வளவு கடினமான சூழ்நிலையையும் அசால்ட்டாக கடந்துவிடும் ஆளுமையை இவர்கள் கொண்டிருந்தாலும், முதலில் குழந்தை போல் அழுதுவிடுவார்கள். இவர்களின் இயல்பிலேயே விளையாட்டுத்தனமும் கலந்திருக்கும்.
மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்மை இயல்புக்கும் மர்மமாக குணத்துக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
மிதுன ராசிக்காரர்கள் புதிய அனுபவங்களை விரும்புகிறார்கள் மற்றும் அறிவுக்கான தீராத தாகத்தைக் கொண்டுள்ளனர்.அவர்களின் குழந்தைத்தனமான இயல்பு அவர்களின் தீவிர ஆர்வத்தின் மூலம் பிரகாசிக்கிறது.
இவர்கள் மற்றவர்கள் பார்வையில் தனிமை விரும்பிகளாக தோன்றினாலும், இயல்பில் குழந்தைகள் போல் அனைவருடனும் சேர்திருப்பதையே விரும்புவார்கள் ஆனால் பெரும்பாலான நேரங்களில் இவர்களின் உண்மை குணத்தை மறைத்துக்கொள்ளும் இயல்பு இவர்களிடம் இருக்கும்.

