உலகத்தில் வாழும் அனைவருக்கும் ஒரு நல்ல பக்கமும் இருக்கும் கெட்ட பக்கமும் இருக்கும். சூழ்நிலையை பொறுத்து அவர்களின் எண்ணங்களும் மாறிக்கொண்டே இருக்கும். 

ஜோதிட சாஸ்திரத்தின் படி, யாராலும் உண்மையில் மனதைப் படிக்க முடியாது என்றாலும், சில ராசிகளில் பிறந்தவர்கள் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் அல்லது உணர்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளும் ஒரு அசாதாரண திறனைக் கொண்டுள்ளனர் எனப்படுகின்றது.

இந்த ராசிகளில் பிறந்தவர்கள் சக்திவாய்ந்த உள்ளுணர்வு, கூர்மையான பார்வை மற்றும் பச்சாதாபம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதனால் அவர்கள் ஒரு மனிதனின் முக பாவனை வைத்து அவர்கள் எப்படி செயற்படுவார்கள் என்பதை கூறுவார்களாம். 

அந்த அதிர்ஷ்டம் எல்லா ராசிகளில் பிறந்தவர்களுக்கும் தெரியாது. அப்படி இந்த மாய சக்தி படைத்த ராசியினர் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம். 

மற்றவர்கள் மனதை படிக்கும் மாய சக்தி கொண்ட ராசி காரர்கள் - நீங்க இந்த ராசியா? | Zodiac Signs Magical Power Read Other People Minds

விருச்சிகம்

  1. விருச்சிக ராசிக்காரர்கள் உள்ளுணர்வும் உணர்வுகளும் வழிநடத்தும் வகையில் செயல்படுவதில் சிறந்தவர்கள். புளூட்டோவால் ஆளப்படும் இவர்களுக்கு, ஒருவரின் உண்மையான நோக்கத்தை எளிதில் உணரும் திறன் உள்ளது.
  2. மற்றவர்களின் குரல் தொனி, உடல் மொழி, சிறிய முகபாவனைகளையும் கவனித்து புரிந்துகொள்ளும் கூர்மையான பார்வை இவர்களுக்கு இயல்பாகவே உள்ளது.
  3. ஆழ்ந்த உளவியல் நுண்ணறிவு காரணமாக, பிறர் மறைக்கும் உண்மைகளையும் விருச்சிக ராசிக்காரர்கள் சுலபமாக கண்டறிவார்கள்.

மீனம்

  1. மீன ராசிக்காரர்கள் அனைவரையும் விட அதிக இரக்கம் கொண்டவர்கள்.
  2. கனவுகளுக்கும் மாயைகளுக்கும் அதிபதியான நெப்டியூனால் ஆளப்படும் அவர்கள், தங்கள் உணர்வுகளோடு மட்டுமல்லாமல் பிறரின் உணர்வுகளோடும் ஆழமாக இணைபவராக இருக்கிறார்கள். 
  3. மற்றவர்கள் பேசாமல் இருந்தால்கூட, அவர்கள் என்ன உணர்கிறார்கள், என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைக் கண நேரத்தில் உணர்ந்து கொள்வார்களாம்.
  4. சுற்றியுள்ள உணர்ச்சி அலைகளை உணர்ந்தறியும் இயல்பான சக்தி, மீன ராசிக்காரர்களை நெருக்கமானவர்களின் மனநிலையையும் எண்ணங்களையும் புரிந்துகொள்ளக் கூடியவர்களாக மாற்றுகிறது.

கடகம்

  1. சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்கள், உணர்ச்சி உலகத்துடன் மிகவும் இணக்கமாக இணைக்கப்பட்டுள்ளார்கள். 
  2. கடக ராசிக்காரர்கள்  தங்களைச் சுற்றியுள்ளவர்களின் உணர்ச்சிகளையும், எண்ணங்களையும் புரிந்துகொள்ளும் வலுவான திறனைக் கொண்டுள்ளனர்.
  3. அவர்கள் இயல்பாகவே மற்றவர்களின் தேவைகள் மற்றும் உணர்வுகளுக்கு உணர்திறன் உடையவர்கள். பெரும்பாலும் ஒருவர் என்ன நினைக்கிறார் அல்லது உணர்கிறார் என்பதை அவர்கள் சொல்வதற்கு முன்பே அறிவார்கள்.
  4. கடக ராசிக்காரர்கள் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களின் தேவைகளை உணர்ந்து அதை நிறைவேற்றுவார்கள்.