தினமும் 3 கப் காபி குடிப்பதால் ஞாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் குறைவதாக ஆய்வு ஒன்றில் தெரயிவந்துள்ளது.
இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் காலை எழுந்ததும் எடுத்துக் கொள்ளும் பானம் என்றால் அது டீ அல்லது காபி தான்.
இவற்றினை பருகுவது உடலுக்கு கெடுதல் என்றாலும் அந்த பழக்கத்தினை விடமுடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காபி பிரியர்களுக்கு ஒரு சந்தோஷமான தகவல் வெளியாகியுள்ளது. ஆம் காபி குடிப்பதால் டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படும் அபாயம் குறைவதாக கூறப்படுகின்றது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு லட்சத்து 31 ஆயிரம் பேர் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் இவர்கள் தினமும் காபி எவ்வளவு அருந்தினரம் என்பதையும், அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் ஞாபக திறன் இவற்றினை ஒப்பிட்டுள்ளனர்.
குறித்த ஆய்வின் முடிவில் இரண்டு முதல் 3 கப் காபின் கொண்ட டீ அல்லது காபி குடித்தவர்கள், குடிக்கதாவர்களை விட 15 முதல் 20 சதவீதம் வரை டிமென்ஷியா என்ற ஞாபக மறதி அபாயம் குறைவாக இருந்துள்ளனர்.

ஆனால் 3 கப்பிற்கு அதிகமாக குடிப்பவர்களுக்கு எந்தவொரு கூடுதல் பலனும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
மூளை ஆரோக்கியத்தினை பாதுகாப்பதற்கு பல வழிகள் இருந்தாலும், டிமென்ஷியாவைத் தடுப்பதற்கு காபின் கலந்த காபி அல்லது டீ முக்கியமானதாக இருப்பதாக ஹார்வர்ட் மருத்துவ கல்லூரி உதவி பேராசிரியரான டாக்டர் டேனியல் வாங் தெரிவித்துள்ளார்.

மேலும் டீ மற்றும் காபி போன்ற பானத்தில் பாலிபினால்கள் போன்ற பொருட்கள் இந்த நன்மைக்கு காரணமாக இருக்கும் என்றும் இவை வீக்கம் மற்றும் செல் சேதத்தை குறைப்பதுடன், நினைவுத்திறன் சரிவை தடுப்பதாகவும் தெரியவந்துள்ளது.
