Chanakya Niti: சாணக்கியர் பண்டைய இந்தியாவின் தலைசிறந்த ஞானிகளில் ஒருவராக அறியப்படுகிறார். அவருடைய சாணக்கிய நீதி இன்றும் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற நூலாக விளங்குகிறது. சாணக்கியர் தனது வாழ்க்கையில் மிகவும் கடினமான நேரங்களை எதிர்கொண்டார், ஆனால் அவர் ஒவ்வொரு சூழ்நிலையையும் உறுதியாக எதிர்கொண்டது மட்டுமல்லாமல், அந்தச் சூழ்நிலைகளை தங்கள் வாழ்க்கையின் பாடமாக மாற்றினார்.

சாணக்கிய நீதி வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றி விவரித்துள்ளது, அதில் ஆண்-பெண் உறவுகளும் முக்கியப்பங்கு வகிக்கிறது. சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ள படி, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, தனது எதிர்பாலினித்தவர் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். இது இயற்கையானதுதான், ஆனால் இந்த ஈர்ப்பு கள்ள உறவாக மாறும்போது அது ஒரு திருமண வாழ்க்கையை முற்றிலும் சிதைத்து விடும்.

உலகின் அனைத்து மதங்களிலும், கலாச்சாரங்களிலும் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் ஒரு கொடிய பாவமாகக் கருதப்படுகின்றன. ஒரு ஆண் தன் மனைவியைத் தவிர வேறு பெண்களிடம் ஈர்க்கப்படுவதற்கான சில காரணங்களை சாணக்கிய நீதி விளக்குகிறது. அவற்றைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

உணர்ச்சி முதிர்ச்சியின்மை

இளம் வயதிலேயே அல்லது உணர்ச்சிவசப்பட்டு அவசரமாக திருமணம் செய்துகொள்வது பொதுவாக திருமண மீறிய உறவுக்கு கூறப்படும் ஒரு முதன்மையான காரணமாகும். ஒருவர் தங்களின் தனிப்பட்ட இலக்குகள், லட்சியங்கள் அல்லது உணர்ச்சித் தேவைகளை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு முன்பே திருமணம் செய்துகொள்ளும்போது, ​​பிற்காலத்தில் அவர்கள் திருமண உறவில் திருப்தியின்மையை உணருவார்கள். வயது அதிகரிக்கும் போது சிலர் தங்கள் தேர்வுகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்குகிறார்கள். வாழ்க்கைத் துணையை மட்டும் சார்ந்திராமல், அவர்கள் புதிய உறவுகளை நோக்கி ஆர்வம் காட்டுகிறார்கள்.

உடல்ரீதியான நெருக்கமின்மை

பெரும்பாலான ஆண்கள் வயது அதிகரிக்கும் போது உணர்வுப்பூர்வமான அரவணைப்பு அல்லது உடல்ரீதியான நெருக்கம் குறைவதை அனுபவிக்கிறார்கள். மோசமான வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் வெளிப்படையான உரையாடல் இல்லாமை ஆகியவை கணவன்-மனைவி இடையே படிப்படியாக இடைவெளியை உருவாக்கக்கூடும். வயது அதிகரிக்கும் போது ஆண்கள் தங்களின் பாலியல் தேவைகளை பற்றி தங்கள் துணையுடன் வெளிப்படையாக இருப்பதை தவிர்ப்பார்கள், இந்த மௌனமே தம்பதியருக்கு இடையேயான இடைவெளியை அதிகரிக்கக்கூடும். இதுபோன்ற சூழ்நிலைகளில், ஆண்கள் வேறொருவரால் ஈர்க்கப்படலாம்.

Chanakya Niti Why Married Men Feel Attracted to Others Wives

முக்கியத்துவம் குறைதல்

குழந்தைகளின் வருகை குடும்ப உறவுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. குறிப்பாக பெண்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குழந்தை பிறப்புக்கு பின் மிகவும் அதிகரிக்கலாம், இதனால் அவர்கள் கணவருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குறையலாம். இந்த காலகட்டத்தில் தம்பதியினர் தங்கள் உணர்வுகளை பாதுகாக்கவில்லை என்றால், இருவரில் ஒருவர் புறக்கணிக்கப்பட்டதாக உணரக்கூடும். பரஸ்பர புரிதல் மற்றும் பகிரப்பட்ட பொறுப்புகளுடன், பெரும்பாலான தம்பதியினர் இந்தக் கட்டத்தை வெற்றிகரமாகக் கடந்து செல்கின்றனர். இது விரைவில் சரிசெய்யக் கூடியதாக இருந்தாலும் சிலர் இந்த காலகட்டத்தில் தடம் மாறக்கூடும்.

புது உறவுகள் மீதான ஈர்ப்பு

மனித உளவியல் பெரும்பாலும் புதுமை மற்றும் கிளர்ச்சியின் பக்கமே ஈர்க்கப்படுகிறது. மனம் புதிதாகவோ அல்லது மாறுபட்டதாகவோ தோன்றும் விஷயங்களின்பால் எளிதில் ஈர்க்கப்படக்கூடியதாகவும் இருப்பதாக சாணக்கியர் கணித்துள்ளார். ஆனால் இத்தகைய ஈர்ப்பு பெரும்பாலும் குறுகிய காலமே நீடிக்கக்கூடியது என்றும், அதன் அடிப்படையில் அவசரப்பட்டுச் செயல்பட்டால் அது வருத்தத்திற்கே வழிவகுக்கும் என்றும் நவீன நடத்தை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நீண்டகாலத் திருப்தியானது, புதுமையை விட நம்பிக்கை, இணக்கம் மற்றும் உணர்வுசார் பாதுகாப்பு ஆகியவற்றையே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது.

சுய ஒழுக்கமின்மை

சாணக்கியர் தன்னடக்கத்தை மிகசிறந்த நற்பண்பாக வலியுறுத்தினார். சாணக்கிய நீதியின் படி, மோசமான சுய ஒழுங்குமுறை அல்லது ஆரோக்கியமற்ற சமூகச் சூழல்கள், உறவுகளில் அவசர முடிவுகள் எடுப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். சமூக அழுத்தம், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள், அல்லது துரோகத்தை இயல்பாக்கும் சூழல்களுக்கு ஆட்படுதல் ஆகிய அனைத்தும் தனிமனித ஒழுக்கத்தை பலவீனப்படுத்தும்.