குருவின் நட்சத்திர பெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
குரு நட்சத்திர பெயர்ச்சி
பொதுவாக ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசியினை மாற்றிக் கொள்கின்றது. இத்தருணத்தில் 12 ராசிகளுக்கும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.
கிரகங்கள் 9ல் மங்களகரமான கிரகமாக குரு பகவான் அறியப்படுகின்றார். குரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பெயர்ச்சி அடையும் நிலையில், தற்போது ஜுன் மாதம் பெயர்ச்சி அடைகின்றார்.
ஜுன் 2ம் தேதி குரு கடக ராசிக்கு பெயர்ச்சியடையும் நிலையில் தொடர்ந்து, ஜுன் 18ம் தேதி பூச நட்சத்திரத்திற்கும் பெயர்ச்சி அடைகின்றார்.
இதனால் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வம், தொழிலில் வளர்ச்சி காணப்படும். அவை எந்தெந்த ராசியினர் என்பதை தெரிந்து கொள்வோம்.

கன்னி
குரு நட்சத்திர பெயர்ச்சியினால் கன்னி ராசியினருக்கு நிதி ரீதியாக லாபம் கிடைப்பதுடன், செய்யமுடியாமல் இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.
பழைய கடன்கள் அடைவதுவடன் புதிதாக வருமானம் கிடைக்க வழியும் கிடைக்குமாம். சின்ன சின்ன பிரச்சனைகள் தீர்வதுடன், தொழில், வேலையில் முன்னேற்றம் அடைகின்றது.
பணியிடத்தில் அங்கீகாரம் மற்றும் உயர் அதிகாரிகளிடம் பாராட்டும் கிடைப்பதுடன், பதவி உயர்வு, புதிய பொறுப்பு கிடைக்கின்றது.

கடகம்
கடக ராசியினர் குரு பெயர்ச்சியினால் புதிய பொறுப்பு, பதவி உயர்வு கிடைப்பதுடன், உயர் அதிகாரிகளுடன் முழு ஆதரவும் பெறுவார்கள்.
தைரியம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், பல வழிகளில் உங்களுக்கு லாபம் கிடைப்பதுடன், தொழிலிலிருந்து எதிர்பாராத லாபத்தை பெறுவீர்கள்.
கூட்டுத் தொழிலிலிருந்த பிரச்சனைகள் தீர்வதுடன், மன அழுத்தம் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்குமாம். பல வழிகளிலிருந்து வருமானம், குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுகின்றது.

தனுசு
குருவின் நட்சத்திர பெயர்ச்சியினால் தனுசு ராசியினருக்கு மங்களகரமாக இருப்பதுடன், செல்வம், அதிர்ஷ்டம் கிடைப்பதுடன், குடும்பத்தில் உள்ள தகராறுகள் நீங்கும்.
உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவதுடன், பணியிடத்தில் புதிய பொறுப்புகளும் கிடைக்கும். வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது.
குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதுடன், வீடு, சொத்து, வாகனம் வாங்கும் யோகமும் கிடைக்கின்றது.

மீனம்
மீன ராசியினருக்கு இந்த குருபெயர்ச்சியினால் செல்வம் அதிர்ஷ்டம் பெருகுவதுடன், பிரச்சனைகள் அனைத்தும் தீர்வதுடன், உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிப்பதுடன், குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். திருமண தடைகள் நீங்குவதுடன், வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல செய்தியும் கிடைக்கும்.
நிலுவையில் உள்ள பணிகள் அனைத்து முடிவிற்கு வருவதுடன், நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

