பெரும்பாறை அருகே உள்ள மங்களம்கொம்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் தினேஷ்குமார் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர் 16 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தாண்டிக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, தினேஷ்குமாரை கைது செய்தார்.