பிரித்தானியாவில் இருக்கும் லண்டன் மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வரும் புதன் கிழமை முதல் டையர் 3 என்ற கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதை, சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் உறுதிபடுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருப்பினும், தலைநகரான லண்டனில் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது.
இதனால் அங்கு Tier 3 அதாவது, மூன்றடுக்கு கட்டுப்பாடுகள் மிக விரைவில் கொண்டுவரப்படும் என்று கூறப்பட்டது.
ஏனெனில், இந்த குளிர்காலத்தில் மக்கள் கட்டுப்பாடுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாவிட்டால், பேரழிவு தரக்கூடிய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று லண்டன் மேயரின் செய்தி தொடர்பாளர் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது, லண்டன், Hertfordshire, Essex மற்றும் சில பகுதிகள் வரும் புதன்கிழமை முதல் மிக உயர்ந்த அளவிலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளில் மூழ்கும் என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் அறிவித்துள்ளார்.
தலைநகர் மற்றும் தென்கிழக்கு மீது மூன்றடுக்கு (Tier 3) கட்டுப்பாடுகள் விதிக்கபடாவிட்டால் பொருளாதாரத்தில் பேரழிவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
பரபரப்பான பண்டிகை காலங்களில் டேக்அவே சேவைகளைத் தவிர்த்து விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இங்கிலாந்தின் இந்த(Tier1,2,3) அடுக்குகளைப் பற்றிய முறையான மறு ஆய்வு புதன்கிழமை நடைபெறவிருந்தது. ஆனால் பிரித்தானியாவில் 32 பெருநகரங்களிலும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து லண்டனின் நிலையை சுகாதார செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
Tier 3(மூன்று கட்டுப்பாடுகளின்) கீழ், மக்கள் தங்கள் வீட்டுக்கு வெளியேவோ அல்லது தனியார் தோட்டங்களிலோ அல்லது வெளிப்புற இடங்களிலோ சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
கிறிஸ்மஸுக்கு ஆரம்பத்தில் பள்ளிகள் மூடப்படலாம் என்ற லண்டன் மேயர் சாதிக்கானின் ஆலோசனையை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.
தலைநகரில் 10 முதல் 19 வயதுடையவர்களிடையே குறிப்பிடத்தக்க கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதாகவும், பள்ளிகளையும் கல்லூரிகளையும் கிறிஸ்மஸுக்கு முன்னதாகவே மூடிவிட்டு ஜனவரி மாதத்தில் மீண்டும் திறக்குமாறு அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று லண்டன் மேயர் கூறியிருந்தார்.
லண்டன் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று மற்றும் செவ்வாய்க்கிழமை முதல் முன்னுரிமை சோதனை வழங்கப்பட வேண்டும் அவர் கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.