சந்திரயான்-2 விண்கலம் வாயிலாக கிடைத்த தகவல்களை இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

நிலவின் துருவப் பகுதிகளில் நீர்பனி இருப்பது போன்ற தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சுமார் ஆயிரத்து 56 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட நிலவின் மேற்பரப்பில் 22 சுற்றுப்பாதைக்கான படங்கள் பெறப்பட்டுள்ளது.

சந்திரயான்-2 அனுப்பிய தகவல்கள் இப்போது இஸ்ரோவின் இணையதளம் உட்பட நான்கு இணையதளங்களில் இஸ்ரோவால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

இந்த தகவல்களை பொதுமக்கள் பார்க்க முடியும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.