மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கான 11 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனைகளில் நேற்றைய தினம் (30) மேலும் 16 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

​நேற்றைய தினம் 940 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் இதுவரை மேல் மாகாணத்தில் இருந்து வௌியேற முற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் 90 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய மேலும் 195 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இதுவரை மொத்தமாக 572 பேர் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.