1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர் வேலைவாய்ப்பு காப்புறுதி இறுதி செய்வதற்கான (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் நடைமுறைக்கு வரும் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்தின படி அதிகபட்ச இழப்பீட்டு தெகையில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது, 2003 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட 1971 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க தொழிலாளர் வேலைவாய்ப்பு காப்புறுதி இறுதி செய்வதற்கான (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் பயன்பாட்டில் உள்ளது.
குறிப்பாக தொழிலாளர் ஒருவர் தொழிலிருந்து நிறுத்தப்பட்டவுடன் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிப்பதற்கான ஒரு சூத்திரத்தை இந்த சட்டம் அறிமுகப்படுத்துகிறது.
இந்த விசேட சூத்திரத்தின் கீழ் கணக்கிடப்பட்ட இழப்பீட்டுத் தொகை 1,250,000 ரூபாய்க்கு அதிகரிக்காமல் இருக்க வேண்டும்.
ஏதேனும் காரணங்களுக்காக தொழிலாளரை நீக்குதல் மற்றும் நிறுவனத்தை மூட நேரிட்டால் அதிகபடியான மாதாந்த சம்பளத்தை பெறும் ஊழியருக்கு கிடைக்கும் நட்டஈட்டு தொகை குறைவாக உள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, தொழில் அமைச்சரின் கோரிக்கைபடி இழப்பீட்டுத் தொகையை அதிகபட்சமாக 1,250,000 ரூபாவிலிருந்து 2,500,000 ஆக உயர்த்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கான முக்கிய செய்தி
- Master Admin
- 12 January 2021
- (597)

தொடர்புடைய செய்திகள்
- 14 August 2020
- (529)
இறுதி முடிவைப் பெற நாம் அமைதியாக காத்தி...
- 31 March 2024
- (398)
துரோகம் செய்யும் ராசிக்காரர்கள் இவர்கள்...
- 21 March 2024
- (231)
மஞ்சள் நிற பற்கள் வெள்ளை ஆகணுமா? அப்போ இ...
யாழ் ஓசை செய்திகள்
தொழிற்சங்க நடவடிக்கைக்குத் தயாராகும் ஆசிரியர்கள்
- 08 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.