பாகிஸ்தான் நாட்டில் இன்று நடந்த விமான விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 98 பேர் உயிரிழந்துவிட்டதாக கராச்சி மேயர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் விமான விபத்து: 98 பேர் பலி விமானம் விழுந்த பகுதி கராச்சி: பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சி நோக்கி இன்று பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 91 பயணிகள் 8 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 99 பேர் பயணித்தனர்.
விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையறக்க முயற்சித்தபோது முதல் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து விமானத்தை வானில் ஒருமுறை வட்டமடித்துவிட்டு ஓடுதளத்தில் விமானத்தை மீண்டும் தரையிறக்க விமானி முயற்சித்துள்ளார்.