தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்று தற்போது நாடு திரும்பி தொழில் அற்று உள்ளோருக்கு 1 இலட்சம் ரூபா வரையான உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க 50,000 ரூபா வரையான வட்டியில்லா கடனை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊடாக வழங்கவும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
´தொழிலை இழந்து நாட்டுக்கு வரும் இலங்கையர்களுக்கு 50,000 ரூபா வரை உதவித்தொகை வழங்கப்படும். எனினும் இதனை 100,000 வரை அதிகரிக்குமாறு நான் கேட்டக்கொண்டேன். மேலும் 50,000 ரூபாவை வட்டியில்லா கடனாக வழங்குமாறு கேட்டேன். தொடர்ந்தும் நாட்டில் இருக்க எதிர்பார்த்துள்ளவர்களுக்கு இந்த உதவியை வழங்குமாறு நான் அதிகாரிகளை பணித்துள்ளேன்´. எனவும் அமைச்சர் கூறினார்.
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுச் செய்து வெளிநாடு சென்ற பணியாளர்களுக்கு நாடு திரும்ப தேவையான விமான பயணச் சீட்டை பெற்றுக் கொடுக்குமாறும் அமைச்சர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
கொழும்பில் நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
தொழிலை இழந்து நாடு திரும்புவோருக்கு வட்டியில்ல கடன்
- Master Admin
- 03 February 2021
- (471)

தொடர்புடைய செய்திகள்
- 27 June 2025
- ()
இந்த ராசியினரை யாராலும் கட்டுக்குள் வைக்...
- 25 April 2025
- (177)
இந்த கனவுகள் அடிக்கடி வருதா?அப்போ அதிர்ஷ...
- 23 December 2020
- (371)
கோண்டாவிலில் கலாசார சீரழிவு - கைதான மூவர...
யாழ் ஓசை செய்திகள்
காருக்குள் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தொழிலதிபர்
- 27 June 2025
இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு
- 27 June 2025
உப்பு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
- 27 June 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.