மகாவலி ஆற்றில் இளைஞனின் சடலமொன்றை நாவலபிட்டி பொலிஸார் மீட்டுள்ளனர்.
நாவலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பவ்வாகம பகுதியை சேர்ந்த ஆர். ஆதித்தியன் என்ற இளைஞனே நேற்று (17) மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
நாவலபிட்டிய நகரிலுள்ள மருந்தகமொன்றில் வேலை செய்யும் குறித்த இளைஞன கடந்த 16 ம் திகதி காலை வீட்டிலிருந்து வேலைக்கு சென்று மீண்டும் திரும்பி வராத நிலையில் தேடப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே அவர் இன்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளர்
பிரதேசவாசிகளினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாவலபிட்டி நீதிமன்ற நீதவான் முன்னிலையில் மரண விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் நாவலப்பிட்டிய பொலிஸார் இளைஞனின் மரணம் கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
17 வயது இளைஞன் சடலமாக மீட்பு - சோகம்!
- Master Admin
- 18 February 2021
- (985)

தொடர்புடைய செய்திகள்
- 03 August 2020
- (571)
கள் அருந்திய மாணவனுக்கு ஏற்பட்ட விபரீதம்
- 20 December 2020
- (412)
இலங்கையில் மேலும் 262 பேருக்கு கொரோனா
- 26 June 2025
- (191)
பேரழிவை ஏற்படுத்திய 1941ம் ஆண்டு... அதே...
யாழ் ஓசை செய்திகள்
அமெரிக்க டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
- 01 July 2025
வரதட்சணை கொடுமை... புதுமணப்பெண்கள் விபரீத முடிவு
- 01 July 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.