ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தட்டாம்புதூர் பகுதியை சேர்ந்தவர் குமார். கூலிதொழிலாளி. இவரது மகள் கவுரி (19). இவர் கோபியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை மனம் உடைந்த கவுரி வீட்டில் குளிர்பானத்தில் சாணிபவுடரை கலந்து குடித்து மயங்கினார்.

இதையடுத்து அக்கம், பக்கத்தினர் மீட்டு கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியிலேயே கவுரி இறந்து விட்டார்.

இந்த சம்பவம் குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.