கொழும்பு நகரத்தின் சனநெரிசல் மிக்கப் பகுதிகளில் போதைக்கு அடிமையான சுமார் 8,000 பேர் சுற்றித் திரிவதால் பயணிகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். நேற்று முதல் அந்த அறிவிப்பை வெளியிட பல பொலிஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.