இலங்கையில் அமைக்கப்படவுள்ள 7 ஆவது அதிவேக நெடுஞ்சாலையின் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் சற்றுமுன்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ருவன்புர நெடுஞ்சாலையின் முதற்கட்ட நடவடிக்கைகளே இவ்வாறு பிரதமரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கஹதுடவயில் இருந்து இங்கிரிய வரையிலான பகுதி முதற்கட்டமாக அமைக்கப்படவுள்ளது.