2 கிலோ 29 கிராம் நிறையுடைய கொக்கைன் போதை பொருளை சூசகமான முறையில் மறைத்து வைத்துக் கொண்டு இலங்கைக்கு வந்த தென்னாபிரிக்க பிரஜையொருவர் சந்தேகத்தின் பேரில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்கப் பிரிவினரால் நேற்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த போதைப் பொருளின் பெறுமதி சுமார் 60 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கொண்டுவந்த பயணப்பொதியை பரிசீலிக்கும் பொழுது அதில் இருந்த இரண்டு செம்போ போத்தல்களில் போதை பொருள் மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இவர் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 664 என்ற பயணிகள் விமானத்தில் கென்யாவிலிருந்து கத்தார் நாட்டின் தோஹா நகரினூடாக இலங்கைக்கு வந்துள்ளார்.

இலங்கை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.