திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கம்பகொட்ட பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை புடையன் பாம்பு தீண்டிய சம்பவம் ஒன்று இன்று (16) பதிவாகி உள்ளது.
வீட்டுக்கு முன்னால் உள்ள பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை புடையன் பாம்பு தீண்டியதில் சிறுவன் மயக்கமுற்ற நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு பாம்பு தீண்டிய சிறுவன் திருகோணமலை - கம்பகொட்ட பகுதியைச் சேர்ந்த தேவிந்த பிரசாந் (10வயது) எனவும் தெரிய வருகின்றது.
குறித்த சிறுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாம்பு தீண்டி வைத்தியசாலையில் அனுமதி
- Master Admin
- 16 May 2021
- (836)

தொடர்புடைய செய்திகள்
- 06 October 2024
- (255)
இந்த ராசியில் பிறந்தவர்கள் காதலர்களை ஏமா...
- 24 March 2021
- (293)
1000/- சம்பள அதிகரிப்பு வர்த்தமானிக்கு எ...
- 09 June 2025
- (92)
வெங்காய எண்ணெய்யை இப்படி பயன்படுத்தி பார...
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.