திருமண கொண்டாட்டத்தின் போது மணப்பெண் செய்த செயல் மணமகனுக்கு மரண பயணத்தினை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக திருமணம் என்றால் அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாகவே இருக்கும். தற்போதைய திருமணங்கள் பல நகைச்சுவையான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றது.
குறிப்பாக சிலரது திருமண நிகழ்வு என்பது சற்று மாறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக பல வித்தியாசமான கொண்டாட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். ஆனால் இவை சில நேரங்களில் விபரீதத்தினை ஏற்படுத்திவிடுகின்றது.
அந்த வகையில் இங்கு மணமக்கள் இருவரும் கையில் ஒரு துப்பாக்கியை வைத்துக் கொண்டு அதில் தீப்பொறியை வரவழைத்து மகிழ்கின்றனர்.
இதில் மணமகன் வானத்தை நோக்கி துப்பாக்கியை பிடித்திருந்த நிலையில், மணப்பெண் மணமகனை நோக்கி துப்பாக்கியை பிடித்து மரண பயத்தினை ஏற்படுத்தியுள்ளார்.