நந்தமுரி பாலகிருஷ்ணா ஒரு நிகழ்ச்சியில் நடிகை அஞ்சலியை தள்ளி விட்ட காணொளி இணையத்தில் கடும் கண்டனத்தை பெற்று வருகின்றது.
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 63 வயதிலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.
திரையில் தன் சக்திக்கு மீறிய காட்சிகளில் நடித்து ரசிகர்களால் ட்ரோல் செய்யப்படுகிறார்.
அதேசமயம் பொது நிகழ்ச்சிகளிலும் எதைப் பற்றியும் யோசிக்காமல் பாலகிருஷ்ணா நடந்து கொள்ளும் விதம் சில நேரங்களில் கடும் சர்ச்சைகளை கிளப்பும்.
இந்நிலையில், தெலுங்கில் “கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி” படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நந்தமுரி பாலகிருஷ்ணா பங்கேற்றார். நிகழ்ச்சியில் மேடையேறிய பாலகிருஷ்ணாவுக்கு அருகில் நேஹா ஷெட்டியும், அதனைத் தொடர்ந்து அஞ்சலியும் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அஞ்சலியை சற்று நகர்ந்து நிற்குமாறு சைகை செய்தார்.
இரண்டு முறை சொல்லியும் அஞ்சலி சில அடிகள் மட்டுமே நகர்ந்தார். இதனால் கடுப்பான பாலகிருஷ்ணா அவரை பிடித்து தள்ளி விட்டார்.
இதனை சற்றும் எதிர்பாராத அஞ்சலி சிரித்து நிலைமையை சமாளித்தார். அங்கிருந்த ரசிகர்கள் பாலகிருஷ்ணாவில் செயலுக்கு கூச்சலிட்டனர். இந்த நிகழ்ச்சியின் காணொளி வைரலான நிலையில், இணையவாசிகள் பலரும் பாலகிருஷ்ணாவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
— Out of Context Telugu (@OutOfContextTel) May 29, 2024