பெண்களாக பிறந்த அனைவருக்கும் திருமணத்திற்கு பின்னர் ஒரு நல்ல கணவர் வேண்டும் என்பதே மிகப் பெரிய ஆசையாக பார்க்கப்படுகிறது.
அந்த கனவு அனைத்து பெண்களுக்கும் நிறைவேறுகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்த ஆண்கள் இயற்கையாகவே பெண்கள் விரும்பும் குணங்களான விசுவாசம், பச்சாதாபம் மற்றும் அர்ப்பணிப்பு போன்றவைகளை கொண்டிருப்பார்கள்.
இந்த குணங்கள் அவர்களுடைய மனைவிகளை திருப்தியாக நினைக்க வைக்கும். கணவர்களுக்கு இப்படியான தகுதிகள் இருக்கும் பொழுது வீட்டில் பிரச்சினைகள் வருவது குறைவாக இருக்கும்.
அந்த வகையில், மனைவிகளை மதிக்கும் சிறந்த மனிதராகவும், அன்பை பொழியும் குணம் கொண்டவர்களாகவும் இருக்கும் ஆண்கள் என்னென்ன மாதங்களில் பிறந்திருப்பார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.
ஆகஸ்ட் |
ஆகஸ்ட் மாதம் பிறந்த ஆண்கள் லட்சியம் மற்றும் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் வெற்றிக்கு அவர்களின் மனைவிகளின் அன்பு தான் காரணமாக இருக்கும். விசுவாசம் மற்றும் ஓழுக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் குடும்பம் மற்றும் நீண்டகால உறவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். அவர்களின் பொறுமை மற்றும் விடாமுயற்சி திருமண உறவில் சவால்களை சமாளிக்க உதவியாக இருக்கும். மனைவிகளுடன் அன்பாக நடந்து கொள்வதால் சண்டைகளே இருக்காது. |
டிசம்பர் |
டிசம்பர் மாதம் பிறந்தவர்கள் இரக்கம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு இருக்கும் பச்சாதாப இயல்பு ஆழமான உணர்ச்சிரீதியான தொடர்பை உருவாக்குகிறது. அத்துடன் அன்பு, நம்பிக்கை மற்றும் வெளிப்படையான தொடர்புக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். மனைவிக்கு துணையாக நின்று அவர்களின் தேவைகளுக்கு உதவிச் செய்வார்கள். நெகிழ்வுத்தன்மை மற்றும் தகவமைப்புத் திறன் வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும். அவர்களுக்கு இருக்கும் அதீத காதல் உணர்வாலும், மென்மையான அணுகுமுறையாலும் பிணைப்பு வளர்கிறது. |
ஏப்ரல் |
ஏப்ரல் மாதம் பிறந்த ஆண்கள் அனுதாபம் கொண்ட கணவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் இயற்கையாகவே மனைவியை அன்பாக பார்த்துக் கொள்ளும் குணம் இருக்கும். அவர்கள் குடும்பம் மற்றும் உறவுகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களை வேலையை தியாகம் செய்வார்கள். இந்த மாதம் பிறந்த ஆண்கள் மனைவிக்கு பாதுகாப்பாகவும், விசுவாசம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த ஆண்களிடம் உள்ள உள்ளுணர்வு துணையின் தேவைகளை புரிந்து கொண்டு ஆழமான தொடர்பை வளர்க்கிறது. |