குன்னத்தூரில் பேக்கரி வைத்து நடத்தி வந்தவர் செல்வராஜ் (வயது 22). இவரது உறவினர் கண்ணன் (32). இவர்கள் இருவரும் பெருமாநல்லூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார்சைக்கிளை கண்ணன் ஓட்டிவந்தார். செல்வராஜ் பின்னால் அமர்ந்து வந்தார். பெருமாநல்லூர் ஊராட்சி அலுவலகம் அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதியது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் செல்வராஜ் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கண்ணன் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
சாலை தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
- Master Admin
- 23 November 2020
- (480)
தொடர்புடைய செய்திகள்
- 19 November 2020
- (622)
திருச்செந்தூரில் சூரசம்ஹார விழா கடற்கரைய...
- 04 January 2021
- (374)
மத்திய பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை நிலை...
- 04 March 2021
- (594)
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனை...
யாழ் ஓசை செய்திகள்
நடுவீதியில் கை,கால்கள் ஒன்றாக கட்டப்பட்டு இளைஞர் கொலை!
- 03 March 2026
மத்திய கிழக்கிலுள்ள இலங்கையர்களுக்காக அவசர உதவிப் பிரிவு
- 03 March 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
