சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஐதராபாத்தில் 3 வாரங்களுக்கு மேல் முகாமிட்டு இந்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இன்னும் ஒரு வாரத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். அண்ணாத்த படத்தை முடித்ததும் தொடர்ந்து புதிய படமொன்றில் நடிக்க ரஜினி தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த படத்தை டைரக்டர்கள் கார்த்திக் சுப்புராஜ் அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே ரஜினியை வைத்து பேட்ட படத்தை இயக்கினார். அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. தேசிங்கு பெரியசாமி வெற்றி பெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கி பிரபலமானார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. இந்த இரு இயக்குனர்களும் ரஜினியிடம் கதை சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. இவர்களில் யாரை ரஜினி தேர்வு செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மீண்டும் புதிய படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
- Master Admin
- 04 May 2021
- (667)
தொடர்புடைய செய்திகள்
- 04 May 2021
- (726)
சிஎஸ்கே அணி தனிமைப்படுத்தப்பட்டது: நாளை...
- 02 May 2021
- (488)
தொட்டாலே சிக்ஸ்; பொலார்டின் அசுரத்தனமான...
- 30 April 2021
- (496)
அந்த்ரே ரஸல் சுழற்பந்தை எதிர்கொள்ளக் கூட...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் தேவையான பெற்றோல் உள்ளது - அரச அதிபர் அறிவிப்பு
- 28 February 2026
எரிபொருள் விலை அதிகரிப்பு
- 28 February 2026
நாட்டின் பல எரிபொருள் நிலையங்களில் இன்று நீண்ட வரிசை!
- 28 February 2026
போர் பதற்றம் - வீரர்களின் பயண பாதுகாப்பு குறித்து ஐசிசி அவதானம்
- 28 February 2026
ரத்து செய்யப்பட்ட விமான போக்குவரத்து!
- 28 February 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
- 12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
- 11 February 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
