ரஷியாவின் மாஸ்கோவிற்கு கிழக்கே 820 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது டார்டாரஸ்தான் குடியரசு   இங்குள்ள நகரான கசானில் பள்ளிக்கூடம் ஒன்றில் நுழைந்த மர்ம மனித மனித கண்மூடிதனமாக துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதில் குழந்தைகளும், ஆசிரியர்க்ளும் அலறி அடித்து ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் 7 குழந்தைகள்  4 ஆசிரிர்கள் பலியானார்கள்.

இறப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் மாறுபடுகின்றன் ஆனால் அதிகாரிகள் குறைந்தது ஏழு குழந்தைகள் இறந்துவிட்டதாகக் கூறினர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கசானில் உள்ள அனைத்து பள்ளிகளும் மே 12 ஆம் தேதி மூடப்படும் என்று டார்டாரஸ்தான் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

டார்டாரஸ்தான்  ஜனாதிபதி ருஸ்தம் மின்னிகனோவ் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து உள்ளார்.

இந்த தாக்குதலுக்கு பதிலளித்த ரஷிய அதிபர் ஜனாதிபதி விளாடிமர் புதின் கூறும் போது  ரஷ்யாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டங்களை மறுஆய்வு செய்யப்போவதாக  கூறி உள்ளார்.