ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரக பெயர்ச்சி, கிரக இணைப்பு நடக்கும் பொழுது அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.
இதன்படி, கடந்த பிப்ரவரி 25, 2025 செவ்வாய்க்கிழமை மாலை 5:30 மணிக்கு, புதன்-சனி இணைப்பு நடந்துள்ளது. இந்த இணைப்பு சுமாராக 30 வருடங்களுக்கு பின் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
பூஜ்ஜிய டிகிரியில் நடந்த பெயர்ச்சியில் புதனும் சனியும் இணைந்து அசாதாரண மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது.
இந்த புதன்-சனி இணைவால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மகத்தான செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ளன.
அந்த வகையில், புதன்-சனி இணைவால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பெரிய மாற்றங்கள் ஏற்பட போகின்றது என்பதனை பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசி |
- இன்று எதிலும் அவசரம் வேண்டாம்.
- குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
- உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.
- கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
- ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
- கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் கிடைக்கும்.
|
ரிஷபம் ராசி |
- மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
- புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.
- கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
- முருகப்பெருமானை வழிபாட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.
- கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.
|
மிதுனம் ராசி |
- செலவுகளை சமாளிக்கத் தேவையான பணம் கைக்கு வரும்.
- வெளியில் செல்லும் போது தேவையான முன்னெச்சரிக்கையாக இருப்பது சிறந்ததுஇ
- நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
- மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் குறையும்.
- மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுடன் செலவுகளும் ஏற்படும்.
|
கடகம் ராசி |
- மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.
- வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
- வியாபாரத்தில் சக வியாபாரிகள் போட்டியாக வரலாம்.
- தட்சிணாமூர்த்தியை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
- பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும்.
|
சிம்மம் ராசி
|
- நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
- வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
- தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இதனால் பணத்தை கொஞ்சம் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
- அம்பிகை வழிபாடு நல்லது.
|
கன்னி ராசி |
- புதிய முயற்சிகளை காலையிலேயே மேற்கொள்வது நல்லது.
- நீண்ட நாட்களாக காத்திருந்த அனைத்து விடயங்களும் நடக்க வாய்ப்பு உள்ளது.
- வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.
- இன்று வேங்கடேச பெருமாள் நலம் சேர்ப்பார்.
- சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.
|
துலாம் ராசி |
- மனதில் தெய்வபக்தி அதிகரிக்கும்.
- கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.
- காரம் மற்றும் புளிப்பான உணவுகளைத் தவிர்க்கவும்.
- வியாபாரத்தில் லாபம் அதிகரித்து பணவரவு அதிகமாகும். இன்றைய தினம் விநாயகப்பெருமானை வழிப்பட்டால் நல்லது நடக்கும்.
- சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
|
விருச்சிகம் ராசி |
- புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.
- கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
- பைரவரை வழிபடுவதன் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும்.
- வியாபாரத்தில் விற்பனை எப்போதும் போல் இருக்கும்.
- அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படும்.
|
தனுசு ராசி |
- புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
- வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் அதிகரிக்கும்.
- உங்கள் தலையீடு இல்லாமல் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படும்.
- வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும்.
- ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதால் தடைகளும் நீங்கும்.
|
மகரம் ராசி |
- பணப்புழக்கம் அதிகரிக்கும்.
- குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.
- இளைய சகோதரர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கி சந்தோஷமான குடும்ப வாழ்க்கை நடக்கும்.
- அம்பிகையை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத நன்மை நடக்கும் நாளாக இருக்கும்.
|
கும்பம் ராசி |
- புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
- தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.
- வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் மிகுந்த கவனம் தேவை.
- லட்சுமி நரசிம்மரை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாக நடந்துகொள்ளவும்.
|
மீனம் ராசி |
- இன்றைக்கு புதிய முயற்சிகள் சாதகமாகும்.
- சகோதரர் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.
- வியாபாரத்தில் சில பல பிரச்சினைகள் ஏற்படும். அதனை நீங்களே சமாளிக்கலாம்.
- மகாலட்சுமியை வழிபட தடைகள் நீங்கும்
- உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
|