நவீன வளர்ச்சியால் தற்போது அமர்ந்த இடத்தில் இருந்து வேலைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றது.
அதிலும் குறிப்பாக பெண்கள் பலர் அலுவலகத்திலும் அமர்ந்த இடத்தில் இருந்து வேலைச் செய்கிறார்கள். அதே சமயம், வீட்டில் இருந்து வேலைப் பார்ப்பவர்களும் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலைப் பார்க்கிறார்கள்.
இதனால் மலச்சிக்கல், உடல் உஷ்ணம் அதிகரிப்பு, தலைமுடி உதிர்வு, அதிக உடல் எடை உள்ளிட்ட பல நோய்கள் வருகின்றன. அப்படியாயின், மேற்குறிப்பிட்ட நோய்கள் பற்றி தெரிந்திருப்போம்.
மாறாக இதை தவிர்த்து வரும் நோய்களுக்கு நீண்ட நேரம் அமர்வு தானா? காரணம் என்பதனை தொடர்ந்து பதிவை பார்த்து தெரிந்து கொள்வோம்.
1. முதுகு வலி
வீட்டிலிருந்து வேலை பார்ப்பவர்கள் சரியாக உட்காரவில்லை என்றாலோ, மோசமான நாற்காலி அல்லது சோபாவில் அமர்ந்து வேலைப் பார்க்கும் பழக்கம் கொண்டவராக இருந்தாலும், முதுகு வலியுடன் கழுத்து மற்றும் தோள்பட்டைகளில் வலி ஏற்படச் செய்யும். முதுகு வலிக்கு என்ன காரணம் என தெரியாமல் இருப்பவர்கள் இனி உங்களின் இருக்கைகள் சரியாக இருக்கிறதா? என்பதனை சரிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
2. தலைவலி
தொடர்ந்து மடிகணனி அல்லது கணினி பார்க்கும் பொழுது கண்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. இதனால் உங்களின் கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு தலைவலியை உண்டுபண்ணும்.
3. கண்களுக்கு பாதிப்பு
நீண்ட நேரம் கணினி பயன்படுத்தும் ஒருவரின் கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு, நாளடைவில் கண்கள் வறண்டு மங்கி விடவும் வாய்ப்பு உள்ளது.
4. தூக்கம் பாதிக்கப்படும்.
இரவு வெகு நேரம் திரையை பார்ப்பது உங்களின் தூக்கத்தில் தாக்கம் செலுத்தும். அதே சமயம் உங்களின் மூளையின் சுறுசுறுப்பையும் குறைக்கும். இதனால் தான் சிலருக்கு இரவில் சரியான தூக்கம் இருக்காது. சிலருக்கு தூக்கம் சரியாக இல்லாமல் உடல் சோர்வு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
5. எடை அதிகரிக்கும்.
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பு பிரச்சினை வரும். அதுவும் வேலை எதுவும் செய்யாமல் ஒரே இடத்தில் இருந்து வேலைப் பார்ப்பதால் உங்களின் தசைகளுக்கு எந்தவித வேலையிலும் இல்லாமல் அது ஒரு விதமான வளர்ச்சியடையும். இதனால் தான் அதிகமான பெண்களுக்கு குறிப்பிட்ட இடத்தில் மாத்திரம் எடை அதிகரித்து இருக்கும்.
6. கை வலி
தொடர்ந்து தட்டச்சு செய்தல், மவுஸ் பயன்பாடு அதிகமாக இருப்பதால் “டன்னல் சிண்ட்ரோம்” ஏற்படும் அபாயம் உள்ளன. ஆகவே முடிந்தளவு ஒரே வேலையை நீண்ட நேரம் செய்வதை குறைத்துக் கொள்ளவும்.