ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒருவரடைய பிறப்பு ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, காதல் வாழ்க்கை, நிதிநிலை, விசேட ஆளுமைகள், அறிவாற்றல், தோற்றம் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் பெருமளவில் தாக்கம் செலுத்தும்.
அதன் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் இயல்பகவே மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் அபரிமிதமாக அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள்.
அப்படி அனைத்து துறையிலும் தேர்ச்சிபெற்று புத்திசாலித்தனத்துக்கு பெயர் பெற்ற பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
புதனால் ஆளப்படும் மிதுன ராசிக்காரர்கள் மிகப்பெரிய ஆற்றல் கொண்டவர்கள். இந்த காற்று ராசி அறிவுபூர்வமாக உந்துதல் பெற்றது, ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டது.
இந்த ராசி பெண்கள் தகவல்களைப் பெறுதல், திறன்களைக் கற்றுக்கொள்வது மற்றும் பல்வேறு வாழ்க்கை அனுபவங்களை முயற்சிப்பது போன்ற எல்லா விடயங்களிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு உலகத்து அறிவு மற்றும் நிதி முகாமைத்துவ அறிவு என்பன சற்று அதிகமாகவே இருக்கும். மற்றவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசியில் பிறந்த பெண்கள் இவர்களின் நேர்த்திக்கும், முழுமைக்கும் பெயர்பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் அனைத்து துறைகள் குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இயல்பாகவே இவர்களுக்கு நுண்ணறிவு அதிகமாக இருக்கும். இவர்கள் எந்த கடினமான சூழ்நிலைகளையும் அசால்ட்டாக கையாளும் ஆற்றல் கொண்டவவர்களாக இருப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்த பெண்கள் சூழ்நிலைகளை புறநிலையாகப் பார்த்து முடிவெடுக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.
சனிபகவானால் ஆளப்படும் இவர்கள் வாழ்வில், நீதி நேர்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
இந்த ராசிக்காரர்கள் காதல் வாழ்க்கையை விட பெரிய உண்மைகள் மற்றும் நுண்ணறிவுகளுடன் தொடர்பில் இருக்க விரும்புவார்கள்.
இவர்களிடம் ஏன் என்ற கேள்வி எப்போதும் இருந்துக்கொண்டே இருப்பதால், ஆராயும் அறிவு இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.